கூடுவாஞ்சேரி அருகே நிறை மாத கர்ப்பிணி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த் கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2022, 12:14 PM IST
கூடுவாஞ்சேரி அருகே நிறை மாத கர்ப்பிணி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை title=

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மகன் சஞ்சய் வயது (21) சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி இவருடைய மகள் கோடீஸ்வரி (21) இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடைய கடந்த வருடம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி தீபாஞ்சம்மன் கோவில் தெருவில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து வசித்து வந்தனர். 

சஞ்சய் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார் கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஓபிஎஸ் உடன் கை கோர்கிறாரா டிடிவி, போஸ்டர் அடித்து தெறிக்கவிட்ட தொண்டர்கள்!

இதனால் மனமுடைந்த கோடீஸ்வரி நேற்று இரவு வீட்டில் கணவர் சஞ்சய் வேலைக்கு சென்ற பின்பு யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்பு அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் கொண்ட ஒரு வருடத்திலேயே ஒன்பது மாத கர்ப்பிணியான இளம்பெண் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News