இரண்டாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்ட தடுப்பூசி மார்ச் 1 முதல் தொடங்கும்.
இந்தியா இதுவரை 15 நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ள நிலையில், மேலும் 25 நாடுகள் தடுப்பூசியை பெற காத்திருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயர்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் இனி முன்னுரிமை பட்டியலில் இருக்க மாட்டார்கள்.
இந்தியா உலகின் மருந்தகமாக, உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது என ஐநா பாராட்டியுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற இந்திய நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசிகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் கிடங்கு இந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று SII நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்தார்.
கொரோனா வைரசுக்கு எதிரான மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,006 அமர்வு தளங்களில் இது தொடங்கியது.
மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் இரண்டும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் பாதுகாப்பானவை என்று மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்திய, பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.