Tamil Nadu: ஓ பன்னீர்செல்வம் பற்றி பேச ராஜன் செல்லப்பாவுக்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் கள்ள நோட்டு - ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் பதிலடி.
நாமக்கல்லில் அதிமுகவின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதன் மூலம் ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்திருக்கிறார். இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல் இருக்காதீர்கள் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க ராமநாதபுரம் DRO-வுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இன்று நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கபடவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியோடு அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து இன்று 51வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் இபிஎஸ்.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடையாளமும் தரப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.