Budget 2024: நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள்.... நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்?

Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடுய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஊகங்கள் அதிகமாகியுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2024, 12:50 PM IST
  • பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்.
  • நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை கிடைக்குமா?
  • பட்ஜெட்டில் அரசியல் தாக்கம்.
Budget 2024: நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள்.... நிறைவேற்றுவாரா நிதி அமைச்சர்? title=

Budget 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடுய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஊகங்கள் அதிகமாகியுள்ளன.

தேர்தலுக்கு முந்தைய பாஜக-என்டிஏ அரசின் பட்ஜெட்டாக இது இருப்பதால், வரவிருக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் (Central Government) என்னென்ன அறிவிப்புகளை வெளியிடவுள்ளது என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் அரசு பல அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க, குறிப்பாக வருமான வரி தொடர்பான ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை அறியவும் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பல்வேறு பிரிவுகளின் கீழ் கூடுதல் பலன்களைப் பெறுவது முதல் நிலையான விலக்குகளில் (Standard Deduction) சாத்தியமான அதிகரிப்பு வரை, சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அரசு கூடுதல் நிவாரணம் வழங்குவதற்கு போதுமான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை கிடைக்குமா?

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடுத்தர வர்க்க வாக்காளர்களிடையே (Middle Class Voters) வாக்குகளைப் பெறுவதையும், ஆதரவைப் பெறுவதையும் இலக்காகக் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டில் ஜனரஞ்சக நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இருப்பினும், இந்தப் பின்னணியில், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மேலும் 2023-24 மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு (New Income Tax Regime) தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு, நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த பெரிய அறிவிப்புகளும் இருக்காது என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். 

பொருளாதார வல்லுநர்கள், அரசாங்கம் முதன்மையாக உள்கட்டமைப்பு செலவினங்களில் நிலையான கவனம் செலுத்தி,அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று கருதுகிறார்கள். கூடுதலாக, விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்ட சில முக்கிய நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | Budget 2024: மொத்த டார்கெட் இந்த ஒரு துறையின் மீது தான்.. என்ன எதிர்பார்க்கலாம்

பட்ஜெட்டில் அரசியல் தாக்கம்

எதிர்பார்ப்பு உள்ள போதிலும், ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் தனது அரசியல் நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் உள்ளது.

கடந்த ஆண்டு மூன்று முக்கிய மாநிலங்களில் வெற்றிகளைப் பெற்று, ராமர் கோவில், குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டையையும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள இந்த அரசாங்கம், வரவுள்ள மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற ஜனரஞ்சக நடவடிக்கைகளை பெரிதும் நம்ப வேண்டிய அவசியமில்லை என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இது ஒரு பொதுத் தேர்தல் ஆண்டு என்பதால், பெரிய நிதி சலுகைகளை அறிவிக்க ஆளும் பாஜக-விற்குள் குறைந்தபட்சம் சில தூண்டுதல்கள் இருக்கும்" என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். 

எனினும், நிதிப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் அதன் நீண்ட கால லட்சியத்துடன், கொடுப்பனவுகளின் தேவையை அரசாங்கம் சமநிலைப்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கணிசமான நிவாரணத்தை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினரின் உற்சாகத்தை குறைக்கும் அதே வேளையில், பணவீக்க மேலாண்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புகள் மீது அனைவரின் பார்வையும் இருக்கும்.

மேலும் படிக்க | அரசு பெண் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான நாமினியை நியமிக்க சிறப்பு உரிமை! மத்திய அரசு அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News