ஈகோவை விட மக்கள் நலன் தான் முக்கியம்.. ரஜினி பக்கம் சாயும் கமல்!

மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 06:36 PM IST
ஈகோவை விட மக்கள் நலன் தான் முக்கியம்.. ரஜினி பக்கம் சாயும் கமல்! title=

மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்..!

மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) பேட்டியளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு இடத்திலும் எங்கள் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election 2021) நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். AIADMK – DMK இடையே எப்போதும் வழக்கம் போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், ரஜினியும் (Rajinikanth) ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். 

ALSO READ | தமிழக தேர்தல்களுக்காக ஒன்று சேர்கிறார்களா கமலும் ஒவைசியும்? AIMIM-ன் கூட்டணி யுக்தி என்ன?

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி (Makkal Needhi Maiam) தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கட்டமாக மதுரையில் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது முதல் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். 

Image

இதை தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது.. "வரும் தேர்தலில் மக்கள் நலனுக்கான நான் எனது ஈகோவை விட்டுக் கொடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார். MGR DMK-வின் திலகமும் இல்லை; AIADMK-வின் திலமும் இல்லை; அவர் மக்கள் திலகம். எங்கள் கட்சியின் பரப்புரைக்கு மறுப்பு தெரிவிக்கப்படும் போது விஸ்வரூபமாக இருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

Image

ALSO READ | Super Star ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானா? சின்னம் என்ன தெரியுமா?

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்., இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு" என அதில் குறிப்பிட்டுள்ளார். 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News