COVID-19 தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராகலாம் - WHO தலைவர் தகவல்!!

இந்த ஆண்டு இறுதிக்குள் COVID-19 தடுப்பூசி தயாராக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் செவ்வாய்க்கிழமை விளக்கினார்..!

Last Updated : Oct 7, 2020, 10:02 AM IST
COVID-19 தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராகலாம் - WHO தலைவர் தகவல்!! title=

இந்த ஆண்டு இறுதிக்குள் COVID-19 தடுப்பூசி தயாராக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் செவ்வாய்க்கிழமை விளக்கினார்..!

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) கொரோனா வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "எங்களுக்கு தடுப்பூசிகள் தேவைப்படும், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களுக்கு ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.

சந்தைக்கு வந்தவுடன் தடுப்பூசிகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்ய அனைத்து தலைவர்களும் ஒற்றுமை மற்றும் அரசியல் அர்ப்பணிப்பின் அவசியத்தை டெட்ரோஸ் மீண்டும் வலியுறுத்தினார். "எங்களுக்கு அனைவரும் முக்கியம், எங்களுக்குள் ஒற்றுமை தேவை, மேலும் வைரஸை எதிர்த்துப் போராட நம்மிடம் உள்ள எல்லா சக்தியையும் பயன்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

WHO தலைமையிலான COVAX உலகளாவிய தடுப்பூசி வசதியின் ஒன்பது பரிசோதனை தடுப்பூசிகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது"என்று டெட்ரோஸ் கூறினார்.

ALSO READ | உலக மக்கள் தொகையில் பெரும் பகுதி ஆபத்தில் உள்ளது... பகீர் கிளப்பும் WHO!!

இதற்கிடையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் செவ்வாயன்று, கொரோனா வைரஸுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, சரியான அளவில் விநியோகிக்கப்பட்டால், பணக்கார நாடுகள் 2021-ன் பிற்பகுதியில் இயல்பு நிலைக்கு வரக்கூடும் என்று கூறினார். 

"அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் விஷயங்களை இயல்பான நிலைக்குத் திரும்பச் செய்யலாம் - அதுவே சிறந்த வழக்கு" என்று 64 வயதான கேட்ஸ் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலிடம் கூறினார். 

"இந்த தடுப்பூசிகள் வெற்றிபெறுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இப்போது திறன் அதிகரிக்க நேரம் எடுக்கும். எனவே அமெரிக்காவிலும், அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான ஒதுக்கீடு மிக முக்கியமான விவாதமாக இருக்கும், ”என்று அவர் மேலும் கூறினார். ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசிகள் தற்போது அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் ஒழுங்குமுறை ஒப்புதல் பெறும் முதல் போட்டியில் முன்னணியில் உள்ளன.

Trending News