அனைவரும் எதிர்பார்க்கும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது... அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

வந்தே பாரத் ரயில்: தற்போது நாட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாற்காலி கார் இருக்கை வசதி உள்ளது. இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழித்தடத்திலும் இயக்க திட்டம் உள்ளது. இதற்காக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2023, 03:39 PM IST
  • ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் முதல் தொகுதி மார்ச் மாதத்திற்குள் வந்து சேரும்
  • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய முக்கிய தகவல்.
  • வந்தே பாரத் ரயில்கள்ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது... அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! title=

புதுடெல்லி: நாட்டில் ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் அதை உருவாக்க ஒப்பந்தம் பெற்ற கூட்டு நிறுவனத்தில், அதன் பங்குதாரர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள்  சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என நம்பப்பட்டது. ஆனால், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் முதல் தொகுதி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வந்துவிடும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். இந்த ரயில்களை இயக்குவதற்கான திட்டம் தற்போது நடந்து வருகிறது என்றார். ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும். திட்டமிட்டபடி 22 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய முக்கிய தகவல்

நாட்டில் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில், சேர் கார் என்னும் நாற்காலி பெட்டிகள் உள்ளன. இவை சதாப்தி வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. ராஜ்தானி வழித்தடத்தில் ஸ்லீப்பர் வந்தே பாரத் இயக்க திட்டம் உள்ளது. ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் நீண்ட வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கானது என என்று வைஷ்ணவ் கூறினார். புதிய வந்தே பாரத் ரயில்களுக்கான ஏலம் பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும், உள்ளூர்மயமாக்கல் இதில் மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி மற்றும் வாரணாசி இடையே பிப்ரவரி 2019 இல் இயக்கப்பட்டது. இந்த ரயிலை அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இயக்க முடியும். புதிய ரயில்கள் மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள்

ரயில்வே தனது உற்பத்தி அலகுகளில் 102 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎஃப், ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் நவீன பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர, 400 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை உருவாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவற்றில் மூன்று விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக இந்திய, ரஷ்ய நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.40,000 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றது. இதில் அரசு நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மற்றும் ரஷ்ய நிறுவனமான TMH குழுமம் (TMH Group) ஆகியவை அடங்கும். ஆனால் கவுரவம் தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. RNVL கூட்டு முயற்சியில் அதிக பங்குகளை பெற முயற்சிப்பதாக ரஷ்ய நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க | ஆரம்பமே சிக்கலா... வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தில் பிரச்சனை!

வந்தே பாரத் ரயில் ஒப்பந்தத்தில் சிக்கல்

120 முதல் 200 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை வழங்க ரயில்வே டெண்டர் எடுத்துள்ளது. அதை TMH-RVNL வென்றது. ஆனால் ரயில்வே கூட்டமைப்புடன் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. TMH குழுமத்தின் இந்திய வணிகத் தலைவர் செர்ஜி மெட்வெடேவ் கூறுகையில், RVNL இப்போது 69 சதவீத பங்குகளை கோருகிறது. இரு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய ரயில்வேயின் டெண்டர் அறிவிப்பு

முன்னதாக, வந்தே பாரத் ரயில் பெட்டிகளை வழங்குவதற்கான டெண்டரை 2022 டிசம்பரில் ரயில்வே அறிவித்தது. மார்ச் அறிவிக்கப்பட்ட டெண்டரில், TMH-RVNL ஒரு ரயிலுக்கு ரூ.120 கோடி என்ற குறைந்த அளவிலான டெண்டரை  மேற்கோள் காட்டியது. இது தவிர BHEL-Titagarh, BEML-Siemens, Alstom Transport மற்றும் Medha Servo Drives-Stadler Rail ஆகிய நிறுவனங்களும் டெண்டரில் பங்கு எடுத்தன. நாட்டில் தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நாற்காலி கார் வசதி உள்ளது. தற்போது அவை சதாப்தி பாதையில் இயக்கப்படுகின்றன. ஆனால் ஸ்லீப்பர் வந்தே இந்தியா வந்த பிறகு, அதை ராஜ்தானி பாதையில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News