மகா சிவராத்திரியில் இந்த 4 ராசிக்கு சிவபெருமானின் சிறப்பு அருள் கிடைக்கும்

மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவ பெருமான் சிறப்பு அருளைப் தரப்போகிறார். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்வோம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 01:42 PM IST
  • மார்ச் 01 அன்று மகா சிவராத்திரி.
  • ருத்ராபிஷேகம் செய்தால் நன்மை.
  • சிவ பெருமானின் அபிஷேக ஆராதனை நடைபெறும்.
மகா சிவராத்திரியில் இந்த 4 ராசிக்கு சிவபெருமானின் சிறப்பு அருள் கிடைக்கும் title=

புதுடெல்லி: இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனினும் பங்குனி மாத மகா சிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2022 மார்ச் 01 அன்று வருகிறது. அதன்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிவ பெருமான் சிறப்பு அருளைப் தரப்போகிறார். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்வோம். 

4 ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 4 ராசிக்காரர்களுக்கு எப்போதும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். இதற்குப் பின்னால் சில சிறப்புக் காரணங்கள் உள்ளன. மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை மகிழ்விக்கும் செயல்களை மேற்கொண்டால் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

மேலும் படிக்க | முக்கண்ணனுக்கு கண்ணை அர்ப்பணித்த கடவுள் விஷ்ணுவின் கோரிக்கை பின்னணி!

மேஷம்: மேஷ ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர் சிவ பெருமான். மேலும், இந்த ராசியால் சிவபெருமான் மிக விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். எனவே, இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சிவனை வழிபடவும், சிவலிங்கத்திற்கு நீர் வழங்கவும் வேண்டும். மகாசிவராத்திரி அன்றும் முழு பக்தியுடன் சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்து உங்கள் விருப்பங்களைக் கேட்டால், பகவான் சிவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

ரிஷபம்: ரிஷபம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்ரன் மற்றும் சுக்ராச்சாரியார் சிவ பெருமானின் பக்தர்கள் ஆவார்கள். எனவே, இந்த மகா சிவராத்திரி அன்று சிவ பெருமானை வழிபடுவது உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். அதோடு குழந்தைகளும் மகிழ்ச்சியான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். 

மகரம்: மகர ராசிக்காரர்கள் எப்போதும் சிவபெருமானின் அருள் பெற்றவர்கள். இவர்கள் தினமும் சிவபெருமானை வழிபட வேண்டும். இது அவர்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றியைத் தரும். மறுபுறம், மகாசிவராத்திரி அன்றும் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள், உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களிடமும் சிவபெருமான் எப்போதும் கருணை காட்டுபவர். சிவலிங்கத்திற்கு தினமும் தண்ணீர் வழங்குவதும், திங்கட்கிழமைகளில் சக்திக்கு ஏற்ப தானம் செய்வதும் இந்த ராசிக்காரர்களுக்கு அளவில்லா செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும். மகாசிவராத்திரி அன்றும் சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதனால் பெரும் பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News