அக்டோபர் 17-ஆம் நாள் வெளியாகிறது தனுஷ்-ன் வடசென்னை!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை திரைப்படம் வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2018, 05:53 PM IST
அக்டோபர் 17-ஆம் நாள் வெளியாகிறது தனுஷ்-ன் வடசென்னை! title=

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை திரைப்படம் வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை.

இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

மூன்று பாகமாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே படத்தின் ப்ரமோஷன் வேலைகளும் பலமாக நடைப்பெற்று வருகிறது,. அந்த வகையில் முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அனைத்து பாடல்களும் ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளது என்றால் குறிப்பாக 'கோவிந்தமவாள', 'மாடியில நிக்குற மான் குட்டி' பாடல்கள் வைரலாகி வருகின்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 17-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மூன்று வருடமாக உருவாகி வரும் வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக நடித்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் எனக்கு மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே பேர் சொல்லும் விதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News