சனி உதயமாகி இந்த ராசிகளின் தலைவிதியை மாற்றுவார்: பொற்காலம் தொடங்கும்

Shani Uday in March 2023: சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலங்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2023, 03:49 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள்.
  • தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.
  • வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சனி உதயமாகி இந்த ராசிகளின் தலைவிதியை மாற்றுவார்: பொற்காலம் தொடங்கும் title=

சனி உதயம் 2023: கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக இருப்பவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சியாகியுள்ளார். அவர் ஜனவரி 31 ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருக்கிறார். மார்ச் 6, 2023 திங்கட்கிழமை அன்று அவர் உதயமாவார். சனியின் அஸ்தமன நிலையும், உதயமும் பல ராசிகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 

சனியின் அஸ்தமனம் மற்றும் உதயத்தின் பொருள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஜோதிடத்தில், ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போதெல்லாம், அது அஸ்தமனமாவதாக கருதப்படுகிறது. அஸ்தமனமானவுடன் அந்த கிரகம் தெரிவதில்லை. இந்த நிலையில் அதன் விளைவு பலவீனமடையத் தொடங்குகிறது. அதன் பலன்கள் குறையத் தொடங்குகின்றன. 
ஒரு கிரகம் சூரியனை விட்டு நகரத் தொடங்கும்போது அது உதயமாகத் தொடங்குகிறது. இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றால், அவர் செல்வந்தராகிறார். 

சனி பகவான் மார்ச் 6, 2023 அன்று ஹோலிகா தஹனுக்கு ஒரு நாள் முன்பு உதயமாகிறார். சனியின் இந்த நிலை, அசுப பலன்களை பெற்று வந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிலும் இருக்கும். சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலங்கள் ஏற்படும். 

மேலும் படிக்க | மார்ச் மாத பலன் 2023: சனியால் பாதகம் ஏற்பட்டாலும் குரு கை கொடுப்பார்..நம்பிக்கையாக இருங்கள்

ஹோலிக்கு சற்று முன், சனியின் அஸ்தமனத்தால் பல வித சிரமங்களை சந்தித்தவர்கள் இப்போது கவலையின்றி இருக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி உதயமாகி முழு பலன் கிடைக்கும். மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் தற்போது முடிவடையும். 

சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் கடனில் இருந்து விடுபடுவார்கள். இதனுடன், பணமும் லாபமும் இருக்கும், பண வரவு அதிகரிக்கும். 

துலாம்:

குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இப்போது ஆசை நிறைவேறும். அதோடு குடும்ப வாழ்க்கையும் நன்றாக நடக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News