MS தோனியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் டோனியின் மிஞ்சியுள்ளார்!

Last Updated : Jan 29, 2020, 06:02 PM IST
MS தோனியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி... title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் டோனியின் மிஞ்சியுள்ளார்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 38 ரன்கள் குவித்த விராட் கோலி (1126 ரன்கள்) இந்த சாதனையினை படைக்க 37 போட்டிகளை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். இவருக்கு முன்னதாக இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 1273 ரன்களுடன் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்துள்ளார். இவரைத்தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (1148) ரன்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 1112 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை வென்றது இந்தியா. இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்ககு 179 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 38(27) ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்த அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்ரர் மார்டின் குப்டில் 31(21) ரன்களிலும், கொளின் முன்றோ 14(16) ரன்களிலும் வெளியேற அணித்தலைவர் கேன் வில்லயம்சன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற அணியின் எண்ணிக்கை 179-ல் நின்றது. நியூசிலாந்த அணிக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவிக்கப்பட்ட நிலையில் போட்டி சமநிலையில் நின்றது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியது. இம்முறை முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பூம்ரா வீசிய 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியது.

கே.எல் ராகுல் மற்றும் ரோகித்சர்மா இந்திய அணிக்காக களமிறங்கினர். துவக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Trending News