அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2019, 07:08 PM IST
அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயகுமார் title=

அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல்கள் வந்துள்ளன. அது' உண்மை என்று நிருப்பிக்கும் வகையில் பாஜக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.எல்ஏ-க்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி குறித்து பேசி வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா இல்லாத மக்களவை தேர்தலை அதிமுக சந்திக்க உள்ளது. யாருடன் கூட்டணி அமைப்பார்கள்? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம். கூட்டணி குறித்து இறுதி முடிவு கட்சி தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறினார். 

Trending News