‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்...

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

Last Updated : Oct 26, 2019, 05:45 PM IST
‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்... title=

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகா கலையை கற்றுக்கொண்டார்.

பின்னர் சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டதுடன் பலருக்கும் யோகா பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்தார். இதனிடையே மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் இவரின் திறமையும் சேவையும் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ஆம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மாள் பாட்டி  ‘யோகா பாட்டி’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபநாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ஆம் வயதில் கோவையில் இன்று காலமானார்.

நானம்மாள் பாட்டிக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News