பயன்படுத்திக்கோங்க பெண்களே... மாதம் ரூ.1000 திட்டம் - அடுத்த 3 நாள் மட்டும் தான் வாய்ப்பு!

Kalaignar Magalir Urimai Thittam: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 17, 2023, 09:21 PM IST
  • அரசின் தலைமை செயலாளர் இன்று தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
  • விண்ணப்பங்கள் பெறுவது நிறைவடைந்ததும் களஆய்வு செய்யப்படும்.
  • களஆய்வில் மக்கள் ஒத்துழைப்பு செய்ய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பயன்படுத்திக்கோங்க பெண்களே... மாதம் ரூ.1000 திட்டம் -  அடுத்த 3 நாள் மட்டும் தான் வாய்ப்பு! title=

Kalaignar Magalir Urimai Thittam: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர்  மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்த சிறப்பு முகாம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ கலைஞர் மகளிர்‌ உரிமைத்‌ கிட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடந்த ஜூலை 24ஆம் தேதி தர்மபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில் நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்து, விண்ணப்பப்‌ பதிவு முகாம்கள்‌ இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டூள்ளது.

இதுவரை எத்தனை விண்ணப்பங்கள்?

முதற்கட்ட முகாம்கள்‌ ஜுலை 24ஆம் தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம்‌ கட்ட முகாம்கள்‌ ஆகஸ்ட்‌ 5ஆம் தேதி முதல்‌ 14ஆம் தேதி தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்‌ தொடர்ச்சியாக முதலமைச்சர்‌ வருவாய்த்‌ துறையின்‌ கீழ்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ தவிர, அக்குடும்பத்தில்‌ உள்ள தகுதிவாய்ந்த பெண்கள்‌ மற்றும்‌ இந்திரா காந்தி முதியோர்‌ ஓய்வூதிய தேசியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ மற்றும்‌ அமைப்புசாராத்‌ தொழிலாளர்‌ நல வாரியம்‌ ஆகிய திட்டங்களில்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடும்பங்களில்‌ உள்ள ஓய்வூதியதாரர்‌ அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று அறிவித்துள்ளார்கள்‌.

மேலும் படிக்க | ‘காவாலா’ பாடலுக்கு மாஸாக நடனமாடிய ஜப்பானிய தூதுவர்..! வைரலாகும் வீடியோ!

அடுத்த 3 நாள் தான்...

இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில்‌ உள்ள தகுதிவாய்ந்த மகளிர்‌ மற்றும்‌ ஏற்கனவே முகாம்களில்‌ பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில்‌ வருகை புரிய இயலாத குடும்பத்‌ தலைவிகள்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய, ஆகஸ்ட்‌ 18, 19 மற்றும்‌ 20 ஆகிய மூன்று நாட்கள்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்படும்‌ எனவும்‌ மீண்டும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்படி முகாம்களில்‌ பெறப்பட்ட விண்ணப்பங்களில்‌ அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின்‌ சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும்‌. அப்போது விண்ணப்பத்தாரர்கள்‌ களஆய்விற்கு வரும்‌ அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்தாஸ்‌ மீனா  விண்ணப்பங்கள்‌ பெறுதல்‌, களஆய்வு மேற்கொள்ளுதல்‌ போன்ற பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுடன்‌ காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டத்தை தலைமைச்‌ செயலகத்தில் இன்று‌ நடத்தினார்‌.

மேலும் படிக்க | தக்காளி விலையில் இவ்வளவு பெரிய மாற்றமா..? கொண்டாட்ட கடலில் மக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News