கொரோனா நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் கொரோனா...?

ராணிபேட் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ள அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : May 11, 2020, 09:12 PM IST
கொரோனா நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் கொரோனா...? title=

வேலூர் / ராணிப்பேட்டை: ராணிபேட் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ள அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று பதிவான புதிய 798 கொரோனா துற்றுகளில் ராணிப்பேட்டை ஒரு கொரோனா தொற்றை பதிவு செய்தது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷின் தெரிவிக்கையில்., "இன்று, மாவட்டத்தில் ஒரு புதிய நேர்மறை வழக்கு பதிவானது, அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

மொத்தம் 67 நேர்மறையான வழக்குகளில் 39 பேர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 28 பேர் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமையக மருத்துவமனை மற்றும் அடக்கம்பரை அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆவார். இவரது பாதிப்பை அடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டாவது முதன்மை தொழிலாளி இவர் என அடையாளம் காணப்படுகிறார் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவலர், டாஸ்மாக் மதுபானக் கடையில் கடமைக்கு நியமிக்கப்பட்டார். அதன் போது காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வேலூர் மாவட்டம் பல்லிகொண்டாவைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் கோயம்பேடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் மொத்த நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது.

Trending News