வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!

திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

Written by - RK Spark | Last Updated : Jul 24, 2023, 12:40 PM IST
  • திண்டுக்கலில் தொடரும் கொலைகள்.
  • ரவுடி வீடு புகுந்து வெட்டி கொலை.
  • போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!  title=

திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனரா என்ற விவரங்களை விரிவாக காணலாம்.  திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவுடி தான் முனிஸ் என்கிற முனீஸ்வரன். 29 வயதாகும் இவருக்கு இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். முனீஸ்வரன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு,  திண்டுக்கல் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த நிலையில் முனீஸ்வரன் தனது வீட்டில் நேற்று மாலை தூங்கிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முனீஸ்வரனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

din

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் கைரேகை மற்றும் தடைய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த பொருட்களில் தடயங்களில் சேகரித்தனர்.  மேலும் இந்த கொலை தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும் கொள்ளையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி முனீஸ்வரனை வெட்டி கொலை செய்த நபர்கள் 4 பேரை தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்குப்பழி கொலையா அல்லது வேறேதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை: திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News