ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) தலைவர் அஹ்மத் மசூத், பாகிஸ்தான் போர் விமானங்கள் பஞ்ச்ஷிரில் குண்டுகளை வீசுவதாகவும், தங்களது எதிர்ப்பை நசுக்குவதில் தாலிபான்களுக்கு உதவி வருவதாகவும் கூறினர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கினார்.
சந்தேகம் மற்றும் அச்சத்துடன், முல்லா அப்துல் கானி பரதர் தலைமையிலான புதிய தாலிபான் அரசு எப்படி இருக்கும் என உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தாலிபானின் இணை நிறுவனர், முல்லா அப்துல் கானி பராதர் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை விரைவில் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் இறுதியில் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில், விரைவில் ஆப்கானிஸ்தான் புதிய அரசு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (படம்: ராய்ட்டர்ஸ்)
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று நம்பப்படுகிறது.
பெண்கள் விஷயத்தில் தங்களது முந்தைய அரசாங்கத்தை விட தங்களது புதிய அரசாங்கம் மிகவும் தாராளமாக இருக்கும் என்று தாலிபான்கள் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் மீதான கொடுமை பற்றிய செய்திகளும் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன.
நியூயார்க்கில் இடா சூறாவளியில் அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சாலைகள் குளங்களாக மாறிவிட்டன. சுரங்கப்பாதையில் காட்சிகள் நீர்வீழ்ச்சிகள் பாய்கிறது போல் உள்ளது. பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. புயலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நியூயார்க்கில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, மெட்ரோ பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் சாலைகளில் மிதக்கின்றன. இதுவரை குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர் என செய்தி நிறுவனமான AFP செய்தி அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
தாலிபான்கள் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்பு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இப்போது ஆப்கான் நாடு முழுவதும் தலிபான்களின் கடுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. திங்களன்று, கடைசி அமெரிக்க விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த தாலிபான் போராளிகள், காற்றில் சுட்டு சுதந்திரத்தை கொண்டாடினர். கடைசி விமானத்துடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 வருட இராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், புளோரிடா மாகாணம்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது.புளோரிடா மாகாணத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலைமை மோசமாகியுள்ள்ளது
ஆப்கானிஸ்தானில் வரும் நாட்களில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அங்கு ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தது.
காபுலில் மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில், ISIS கோரசன் நெட்வொர்க் அமைப்பை சேர்ந்த இரண்டு உயர்மட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.