தமிழக முன்னால் முதல்வர் ஜெ. இறப்பிற்கு பிறகு, தமிழக மக்களை பரபரப்பினிலே வைத்திருக்கின்றது அதிமுக அரசு. தற்போதைய நிலைமையினில் அதிமுக கட்சி யார் வசம் உள்ளது என்பதினை யாராலும் யூகிக்க முடியாத நிலையில் தான் தமிழகம் இருக்கின்றது.
முன்னதாக கட்சியின் பெயரும், சின்னமும் தங்களுக்கு தான் சேர வேண்டும் என சசிகலா தலைமையிலான அணியினரும், துனைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ள அணிக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கான பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் இன்னும் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்தபாடில்லை.
இந்தியாவின் 21-வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) இன்று பதவி ஏற்றார்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நசிம் ஜைதியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி(வயது 64) பதவி ஏற்றார். இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டிடத்தின் தரைதளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தகவலானது தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்தை அடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். நான்கு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து, இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த போது பெரும் வன்முறை வெடித்தது. வன்முறையில் 8 பேர் பலியாகினர் மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆனந்த்நாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையானது இல்லை என மாநில அரசு தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 74 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கூறியது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு அணி யாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக குற்றம் சாட்டும் அனைத்து கட்சிகள், தலைவர்கள் அதை நிரூபிக்க முடியுமா என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.
இந்திய தேர்தல்களில் இப்போது வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏற்கெனவே புரோக்கிராமிங் செய்யப்பட்டவை என்பதால், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்குகள் விழும்படி தொழில்நுட்ப மோசடி நடந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்தது. அதன்படி நேற்று மாலைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு பதிலளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து ஒரு நாள் கூடுதல் அவகாசம் அளித்தது. அதன்படி இன்று மாலைக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் இன்று சந்திக்கிறார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் நேற்று வழங்குகினார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகினார்.
சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிகளின்படி செல்லாது, எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.பி., மைத்ரேயன் தலைமையில் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்து இருந்தனர்.
இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீசுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் பதில் அளித்து இருந்தார். ஆனால் இந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. பொதுவாக காலியாகும் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.