'இப்போது நேரம் சரியில்லை': விலகிய ஜான்சன், பிரதமர் பதவியை நெருங்கிய ரிஷி சுனக்

UK PM Race: எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதால், வியாழன் அன்று ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2022, 11:02 AM IST
  • இங்கிலாந்துக்கு அளிக்க என்னிடம் இன்னும் நிறைய உள்ளது: போரிஸ் ஜான்சன்
  • ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுவை அறிவித்தார்.
  • பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டிற்கு தேவையான பணிகளை செய்யவும் விரும்புகிறேன்: ரிஷி சுனக்.
'இப்போது நேரம் சரியில்லை': விலகிய ஜான்சன், பிரதமர் பதவியை நெருங்கிய ரிஷி சுனக் title=

லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமார பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறியதிலிருந்து, யார் அடுத்த பிரதமர் என்ற ஆர்வம் அனைவரிடமுமதிகரித்துள்ளது. போரிஸ் ஜான்சன் பிரதமர் போட்டியில் இருந்து விலகியதால், இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமரான ரிஷி சுனக் பதவியேற்கக்கூடும் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கன்சர்வேடிவ் கட்சித் தலைமைப் போட்டியில் தனக்குத் தேவையான ஆதரவு இருப்பதாகக் கூறிய போரிஸ் ஜான்சன் பின்னர் போட்டியில் இஉர்ந்து விலகிக்கொள்வதாக கூறினார். "பாராளுமன்றத்தில் ஒன்றுபட்ட கட்சியை வைத்திருந்தாலொழிய உங்களால் திறம்பட ஆட்சி செய்ய முடியாது" என்பதால்  இந்த முடிவுக்கு வந்ததாக ஜான்சன் கூறினார்.

'சரியான நேரம் இல்லை': போரிஸ் ஜான்சன்

ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோருடன் இது குறித்து சரியான பேச்சுவார்த்தை நடத்தாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். "விஷயம் என்னவென்றால், எனது நியமனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லவில்லை. வெற்றிபெறும் எவருக்கும் எனது ஆதரவை உறுதியளிக்கிறேன்" என்று அவர் கூறினார்.

"இங்கிலாந்துக்கு அளிக்க என்னிடம் இன்னும் நிறைய உள்ளது என்று நான் நம்புகிறேன். ஆனால் இது சரியான நேரம் இல்லையோ என நான் அச்சப்படுகிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார். "2024 ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியை வெற்றி பெற வைக்க நான் நல்ல நிலையில் உள்ளேன் என்று நான் நம்புகிறேன்." என்றார் அவர்.

மேலும் படிக்க | England PM: இங்கிலாந்து பிரதமராக மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்? 

"கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களுடன் தேர்தலில் நான் வெற்றியடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் நான் வெள்ளிக்கிழமை டவுனிங் ஸ்ட்ரீட்டுக்கு திரும்பக்கூடும். ஆனால் கடந்த நாட்களில், இப்படி செய்வது சரியான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு நான் வந்தேன். பாராளுமன்றத்தில் ஒன்றுபட்ட கட்சி இல்லையென்றால் திறம்பட ஆட்சியமைக்க முடியாது,” என்று அவர் தொடர்ந்து கூறியதாக இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜான்சனின் பிரச்சாரக் குழு, முன்னாள் பிரதமருக்கு பாலட் பாக்சில் வருவதற்குத் தேவையான 100 வேட்புமனுக்களை எம்.பி.க்களிடமிருந்து பெற்றுக் கொண்டதாக ஆதரவாளர்களிடம் முன்னதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டிக்கான முறையான முயற்சியாகத் தோன்றிய கரீபியன் விடுமுறையை முடித்துக்கொண்டு சனிக்கிழமையன்று ஜான்சன் பிரிட்டனுக்கு வந்தார். கேபினட் உறுப்பினர்களின் தொடர்ச்சியான ராஜினாமாவைத் தொடர்ந்து, ஜூலை 7 அன்று ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுவை அறிவித்தார்

முன்னதாக, ஜான்சன் பிரதமர் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். தான் அதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறினார். அவர் "அதற்கு தயாராக உள்ளேன்" என்று கூறினார். இதற்கிடையில், லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் கொந்தளிப்பில் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவை அறிவித்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி, தனது சமூக ஊடக கணக்கு மூலம் இந்த முடிவை உறுதிசெய்து, தற்போது பெரும் நெருக்கடியில் உள்ள பிரிட்டனின் பொருளாதாரத்தை சரிசெய்ய விரும்புவதாகக் கூறினார்.

ரிஷி சுனக் தனது ட்வீட்டில், "யுனைடெட் கிங்டம் ஒரு சிறந்த நாடு. ஆனால் நாங்கள் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம். அதனால்தான் நான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் உங்கள் அடுத்த பிரதமராகவும் இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார். 

"எங்கள் பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டிற்கு தேவையான பணிகளை செய்யவும் விரும்புகிறேன்" என்று சுனக் எழுதியுள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதால், வியாழன் அன்று ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ரிஷி சுனக்கின் அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் படிக்க | மா சே துங் போலவே கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்றாவது முறை பொதுச்செயலாளர் ஆனார் ஜி ஜிங்பிங் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News