SSY, PPF, MSSC... தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்: முழு பட்டியல் இதோ

Post Office Saving Schemes: அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 1, 2024, 03:28 PM IST
  • தற்போது அஞ்சலகத்தின் எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
  • எதில் அதிக வட்டி அளிக்கப்படுகின்றது?
  • இந்த பதிவில் இந்த தகவலை பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்க்கள்.
SSY, PPF, MSSC... தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள்: முழு பட்டியல் இதோ title=

Post Office Saving Schemes: பணத்தை சேமித்து வைப்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த பழக்கம் இருந்தால், திடீரென வரும் பணத் தேவைகளின் போதும், அவசர காலங்களின் போதும் நாம் மற்றவர் கையை எதிர்பார்க்கும் நிலை ஏற்படாது. பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. பாதுகாப்பான வழியில் பணத்தை சேமித்து நல்ல வருமானத்தை பெற விரும்பும் நபர்களுக்கு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

அஞ்சல் அலுவலகம் மூலம் பல சிறுசேமிப்புத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசாங்கம் திருத்தங்களை செய்கிறது. 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை), எந்தவொரு தபால் அலுவலகத் திட்டத்தின் வட்டி விகிதங்களிலும் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகையால், இந்த திட்டங்களின் முதலீட்டாளர்கள் தற்போது அக்டோபர் மாதத்திற்காக காத்திருக்கிறார்கள். அக்டோபர் 1 ஆம் தேதி, மீண்டும் ஒருமுறை இந்தத் திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசாங்கம் திருத்தும். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு புதிய வட்டி விகிதங்கள் அறிவிக்கப்படலாம்.

நீண்ட காலமாக அரசு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டமான PPF மீதான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. ஆகையால், பெரும்பாலான மக்கள் PPF வட்டி விகிதத்தில் (PPF Interest Rate) உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அஞ்சலகத்தின் எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? எதில் அதிக வட்டி அளிக்கப்படுகின்றது? நீங்கள் இந்த மாதம் அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்த தகவலை பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்க்கள். 

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் (Interest Rates of Post Office Saving Schemes):

- தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (Post Office Savings Account)- 4%
- 1 ஆண்டு கால வைப்பு (1 Year Time Deposit)- 6.9%
- 2 ஆண்டு கால வைப்பு (2 Year Time Deposit)- 7.0%
- 3 ஆண்டு கால வைப்பு (3 Year Time Deposit)- 7.1%
- 5 ஆண்டு கால வைப்பு (5 Year Time Deposit)- 7.5%
- 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கு (5-Year Recurring Deposit Account)- 6.7%
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) - 8.2%
- மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme) - 7.4%
- பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Public Provident Fund Scheme) - 7.1%
- சுகன்யா சம்ரித்தி கணக்கு (​Sukanya Samriddhi Account) - 8.2%
- தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (National Savings Certificates) - 7.7%
- கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) - 7.5%
- மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate) - 7.5%

மேலும் படிக்க | செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்

இந்த திட்டங்கள் அனைத்தும் தபால் நிலையங்களில் மட்டுமே கிடைக்கும்

இந்தத் திட்டங்கள் அனைத்திலும், வங்கிகளிலும் சிலவற்றுக்கான விருப்பங்கள் கிடைக்கும். எனினும், சில திட்டங்களை தபால் நிலையங்களில் மட்டுமே திறக்க முடியும். தேசிய சேமிப்புச் சான்றிதழ், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், மாதாந்திர வருமானத் திட்டம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

NSC மற்றும் MSSC

NSC மற்றும் MSSC இரண்டும் நிலையான வைப்புத்தொகை போன்றவையாகும். இந்திய குடிமக்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்கு என்எஸ்சியில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் போர்ட்ஃபோலியோவிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்க MSSC திட்டம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் முதலீடு செய்துள்ளார்.

MIS திட்டம்

MIS திட்டம் ஒவ்வொரு மாதமும் வழக்கமான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாயும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாயும் முதலீட்டாளர்கள் டெபாசிட் செய்யலாம். இந்த தொகை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு 7.4% வீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | SmilePay: கேஷ், கார்ட், மொபைல் போன் எதுவும் வேண்டாம்.... கட்டணம் செலுத்த இனி சிரித்தால் போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News