ராகுல் காந்தியின் தண்டனை எதிர்த்து காங்கிரஸ் பேரணி; ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டம்!

Rahul Gandhi’s Conviction: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 24, 2023, 07:57 AM IST
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை.
  • இன்று காலையில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை -ஜெய்ராம் ரமேஷ்
  • நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை காங்கிரஸ் பேரணி நடத்தவுள்ளது.
ராகுல் காந்தியின் தண்டனை எதிர்த்து காங்கிரஸ் பேரணி; ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டம்! title=

புதுடெல்லி, காங்கிரஸ் போராட்டம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தெருவில் இறங்கி போராடப் போவதாகவும், அதேநேரத்தில் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்திய ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் தரப்பில் நேற்று (வியாழக்கிழமை) முடிவு செய்யப்பட்டது.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சி (Congress), வெகுஜனப் போராட்டத்தை உடனடியாக அறிவித்தது.

இந்த தீர்ப்பை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இல்லத்தில் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டினார், அங்கு ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) விஜய் சவுக்கில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க: ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், காங்கிரஸ் கட்சி மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று காலை கூட்டம் நடத்தும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இந்த விவகாரம் குறித்து பேச நேரம் கேட்டுள்ளனர்.

ரமேஷ் கூறுகையில், கார்கேவின் இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு, மாலையில் அனைத்து பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தி மாநிலங்களில் போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைக் கண்டு மத்திய அரசு பயமா?

இந்த விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் போராட்டம் நடத்துவோம் என்று கூறிய ரமேஷ், இந்த விவகாரம் ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஒரு தீவிர அரசியல் பிரச்சினையும் கூட என்றார்.

மேலும் மோடி அரசாங்கத்தின் பழிவாங்கல், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் அரசியலுக்கு இது மற்றொரு முக்கிய உதாரணம். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இதுபோன்ற அரசியலுக்கு அடிபணியவோ, பயப்படவோ மாட்டோம், இதை பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றுவோம் என்றார்.

மேலும் படிக்க: ராகுல் காந்தி "தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்" பாஜக புதிய சர்ச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News