Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!

Aadhaar Card Helpline: ஆதார் அட்டை புதுப்பிக்க அதிக பணம் கேட்கப்பட்டால் மூன்று வழிகளில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம் என UIDAI தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2023, 06:54 AM IST
  • ஆதாரில் புதிய தகவல்களை சேர்த்து கொள்ளலாம்.
  • இதற்கான கட்டணங்கள் நிர்ணயித்துள்ளது அரசு.
  • கூடுதல் கட்டணம் கேட்டால் புகார் செய்யலாம்.
Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!  title=

Aadhaar Card Update: தற்போது இந்தியாவில் புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் புதுப்பிப்புக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஆதார் புதுப்பிப்பு அல்லது மாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி கேட்கப்பட்டால், அதற்கான மூன்று தீர்வுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, ஆதாரை புதுப்பிக்க ஒரு ஊழியர் உங்களிடம் அதிக பணம் கேட்டால், உங்கள் புகாரை மூன்று வழிகளில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அருமையான ஜாக்பாட் திட்டம்.. இப்பவே இந்த வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்

ஆதார் கார்ட் புதுப்பிப்பு

- 1947 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்
- இரண்டாவதாக help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம.
- UIDAI இணைப்பில் நேரடியாக உள்நுழைவதன் மூலம் -resident.uidai.gov.in/file-complaint புகார் செய்யலாம்.

புதிய ஆதார் பதிவு மற்றும் MBU (5 மற்றும் 15 ஆண்டுகளில்) இலவசம் என்று UIDAI தெரிவித்துள்ளது. மேலும், ஆதாரைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு விலாசம் மாற்ற ரூ.50 மற்றும் பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு ரூ. 100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எனவே, ஆதார் அட்டை முகவரி மாற்றம் அல்லது வேறு ஏதேனும் புதுப்பிப்பு அல்லது ஆதார் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் கோரப்பட்டால், ஒருவர் நேரடியாக ஆதார் நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம், அதற்கு 1947 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தலாம். help@uidai.gov.in க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உங்கள் புகாரை கூறலாம் அல்லது பதிவு செய்யலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆதார் எண் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அடையாள வடிவமாக மாறியுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலம் நிர்வகிக்கப்படும் சுமார் 1,200 அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்களில் சேவை வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வங்கிகள் மற்றும் NBFCகள் போன்ற நிதி நிறுவனங்கள் போன்ற சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் பல சேவைகளும் ஆதாரை எளிதாக அங்கீகரித்து வாடிக்கையாளர்களை உள்வாங்க பயன்படுத்துகின்றன. ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிகள், 2016ன் கீழ், தங்கள் தரவுகளின் துல்லியத்தைப் பேணுவதற்காக, பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ஆதாரில் ஆதார் ஆவணங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News