துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்! வீடியோ வைரல்

Shopping Snake Video: கடையில் துணிகளுக்கு நடுவே மறைந்திருந்த மலைப்பாம்பு, அதிர்ந்த உரிமையாளர்... இது இந்தியாவில் துணிக்கடைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 6, 2023, 03:43 PM IST
  • துணிக்கடைக்குள் பாம்பு
  • ஷாப்பிங் செய்ய வந்த 14 அடி பாம்பு
  • பாம்பைக் கண்டதும் பஞ்சாய் பறந்த மக்கள்
துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்! வீடியோ வைரல் title=

நீங்கள் நிம்மதியாக உட்கார்ந்திருக்கும்போது, திடீரென உங்கள் முன்னாள் பாம்பு வந்தால் என்னவாகும்? மூச்சு நின்றுவிடும் என்று சொல்வது அதிகபட்சம் என்று சொன்னாலும், உண்மையில் பீதியில் ஓடத்தான் தோன்றும். ஆனால், எல்லோரும் ஓடிவிட்டால், பாம்பை யார் வெளியே அனுப்புவது? அந்த இக்கட்டான எப்படி கையாளுகிறோம் என்பது வாழ்வா சாவா என்பதற்கான இடைவெளியாகவும் இருக்கலாம்.  இதேபோன்ற காட்சி நேற்று மீரட்டில் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள துணிக்கடைக்குள் செவ்வாய்கிழமை (2023, டிசம்பர் 5)  மாலையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறிக் கொண்டே வெளியே ஓடி வந்தனர். பிரம்மாண்டமாக இருந்த மலைப்பாம்பை காண ஏராளமானோர் திரண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கடும் முயற்சிக்கு பின் மலைப்பாம்பை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் வலைதளத்தில் வைரலாகிறது. இது @anmolmeeruthiya என்ற X பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.

துணிக்கடைக்குள் நுழைந்த மலைப்பாம்பு 
மீரட்டில் உள்ள லால்குர்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகம்பூலில் அமைந்துள்ள பேந்த் என்ற இடத்தில் உள்ள ராமா சூட் என்ற துணிக் கடைக்குள் மலைப்பாம்பு ஒன்று துணிகளுக்கு மேல் ஊர்ந்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இதை பார்த்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிய மக்களின் கூச்சலால் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அதில் சிலர் மலைப்பாம்பை படமெடுத்தனர். நல்ல வேளை, அது படமெடுக்கவில்லை.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கடின உழைப்புக்குப் பிறகு அந்த குழுவினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பின் நீளம் சுமார் 12 முதல் 14 அடி வரை இருக்கும் என்று வன ஆய்வாளர் மோகன் சிங் தெரிவித்தார்.

அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் அபு வாய்க்காலில் இருந்து இந்த மலைப்பாம்பு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

 மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

முன்னதாக, கிரேட்டர் நொய்டாவில் ஒரு பெரிய மலைப்பாம்பு டிரக்கின் கேபினுக்குள் நுழைந்தது. இதை பார்த்த கண்டக்டர் மற்றும் டிரைவர் சத்தம் போட்டு லாரியை நிறுத்தி விட்டு லாரியில் இருந்து குதித்து ஓடினர். இந்த வீடியோவும் வைரலானது.

மலைப்பாம்பை காண பெரும் கூட்டம் அலைமோதியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடும் முயற்சிக்கு பின் மலைப்பாம்பை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News