700 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச மஹாயோகம்: இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம்

Panch Mahajog: மகத்தான பஞ்ச மகா யோகத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2023, 04:05 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் மிகவும் சுபமாக அமையும்.
  • இந்த நேரத்தில் உங்கள் முடிவெடுக்கும் திறன் மிகவும் நன்றாக இருக்கும்.
  • உங்கள் ஆளுமையால் மக்களை கவர முடியும்.
700 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச மஹாயோகம்: இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம் title=

பஞ்ச மகாயோகம் 2023, ராசிகளில் அதன் தாக்கம்: 700 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடந்துள்ளது. இந்த மகத்தான யோகத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன, முன்னேற்றம் ஏற்படவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகிறது. அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மார்ச் மாதத்தில் கேதாரம், ஷாங்க், ஷஷ், வரிஷ்ட மற்றும் சர்வார்த்தசித்தி யோகம் இணைந்து பஞ்ச மகாயோகத்தை உருவாக்குகின்றன. 

இந்த பஞ்சயோகம் சுமார் 700 ஆண்டுகளுக்கு பிறகு உருவானது. இந்த மகத்தான யோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இவர்களுக்கு பண வரவு, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் ஆகியவை மிக அதிகமாக இருக்கும். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் மிகவும் சுபமாக அமையும். இந்த நேரத்தில் உங்கள் முடிவெடுக்கும் திறன் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் ஆளுமையால் மக்களை கவர முடியும். நினைத்ததை இந்த நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குழந்தை தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | ராகு - கேது பெயர்ச்சி: இது மன அழுத்தம் அதிகரிக்கும் காலகட்டம்... இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் அதிக பலன் தரும். ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகமும் உருவாகின்றன. இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். கடக ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலையை தொடங்க இது சாதகமான நேரம். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த காலம் அற்புதமாக இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் உருவாகி நல்ல நாட்கள் தொடங்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் தைரியமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் திடீர் பணவரவு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |மீன ராசியில் புதன் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News