Astro: ஆஞ்சனேயரின் அருளால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்!

கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2022, 06:18 PM IST
  • சனியின் கோபத்தில் இருந்து விடுபட ஆஞ்சனேயரை வழிப்பட்டால் போதும்.
  • இந்த கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது.
Astro: ஆஞ்சனேயரின் அருளால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்!  title=

சனிபகவானின் அருளைப் பெறவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் சில பரிகாரங்களை செய்வது நன்மை பயக்கும். சனி நீதியின் கடவுள் என்பதால், இந்த நேரத்தில் மக்கள் தவறான செயல்களைச் செய்தால், சனியின் அதிருப்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் அந்த நபர் மோசமான பலன்களைப் பெறுகிறார். இது போன்ற சூழ்நிலையில், ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது  ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். 

ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட அனுமனை பூஜிப்பது சிறந்த பலனைத் தரும் என நம்பப்படுகிறது. சனியின் கோபத்தில் இருந்து விடுபட  ஆஞ்சனேயரை வழிப்பட்டால் போதும்.  அதோடு, சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற  வழிபட்டு,  தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான்  மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் நீங்க, அருகில் உள்ள ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும். அனுமனுக்கு பொரி, அவல், கடலை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம், சர்க்கரை போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

மேலும் ஹனுமனுக்கு வெற்றிலையில் மாலை கட்டி சாற்றினால்  வாழ்க்கையின் தடைகள் அனைத்தும் நீங்கும்.  மேலும் ஹனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் என எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் வடை ஆகியவற்றை படைத்து வழிபடுதல் சிறப்பு. அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை  பாராயணம் செய்வதும் நல்ல பலனைத் தரும்.

இது தவிர சனி பகவானின் சாலிசாவைப் படிப்பதும் சிறந்த பலனை கொடுக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது. வீட்டில் சனி யந்திரத்தை நிறுவி, தினமும் வழிபடுவதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பணவரவு உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News