மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து யூகங்களை மெய்யாக்கும் விதமாக சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.
அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ’அயோத்தியில் கோவில்; மகாராஷ்டிராவில் ஆட்சி’ என சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிவசேனாவுடன் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பாரதிய ஜனதாவை அழைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசிய உத்தவ் தாக்கரே, தனது கட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரின் ஆசீர்வாதம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், வியாழன் அன்று இரவு பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி இந்து தலைவர் சம்பாஜி பிதேயின் உதவியை நாடியுள்ளது. அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' இல்லத்தில் சந்திக்க அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் கூறியுள்ளார்.
மோடி (Modi Govt) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என என்.சி.பி கூறியுள்ளதாகத் தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.