நீரிழிவு நோயாளிகள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

நீரிழிவு நோயாளிகள் காலை உணவை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 15, 2022, 04:37 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது
  • காலை உணவில் மருத்துவர்கள் ஆலோசனையோடு 2 முட்டைகள் சேர்த்துக்கொள்ளலாம்
நீரிழிவு நோயாளிகள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் title=

ஒரு மனிதனுக்கு உணவு அவசியமான ஒன்று. அதிலும் காலை உணவை யாருமே தவிர்க்க கூடாது. கிட்டத்தட்ட 8 மணி நேரங்களுக்கும் மேலாக உணவு எடுத்துக்கொள்ளாததால் காலை உணவு உடலுக்கு மிகவும் அவசியம். குறிப்பாக காலையில் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலுக்கு தெம்பு அளிக்கக்கூடியது. 

ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடும். இன்சுலின் வெளியீட்டையும் கட்டுப்படுத்தும். எனவே அன்றைய நாளின் முதல் உணவாக வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படும் காலை உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | Beauty Tips: அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று சொல்லும் அழகு பொருட்கள்

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த காலை உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் முட்டைகளில் கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். புரத சத்து மிகுந்திருக்கும். ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம்.

இருப்பினும் இரண்டு முட்டைகள் சாப்பிடும் விஷயத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு முட்டை சாப்பிடலாம். 

மேலும் படிக்க | Health Alert: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் 4 முக்கிய காரணிகள்

அதேபோல், நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நார்ச்சத்து இதில் உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக கொண்டிருக்கும் ஸ்மூத்திகளையும் தயார் செய்து காலை உணவுடன் பருகலாம். இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். 

சியா விதைகளின் உதவியுடனும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிடலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்துகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க துணை புரியும். காலை உணவில் பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News