இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடையாது: அரசு செய்த விதி மாற்றம், அதிர்ச்சியில் ஊழியர்கள்!!

Pension Rules: அரசின் எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அதனால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியையும் இழக்க நேரிடலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2023, 05:37 PM IST
  • இந்த உத்தரவு எந்த ஊழியர்களுக்கு பொருந்தும்?
  • ஊழியர்கள் மீது யாரெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும்?
  • எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடையாது: அரசு செய்த விதி மாற்றம், அதிர்ச்சியில் ஊழியர்கள்!! title=

கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பிறகு, தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42% அகவிலைப்படி கிடைக்கும். இதுவரை அவர்களுக்கு 38% அகவிலைப்படி கிடைத்து வந்தது. இது ஒருபுறமிருக்க, கடந்த காலங்களில், மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியையும் அளித்துள்ளது. அரசு சார்பில் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், அதனால் பல பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியையும் இழக்க நேரிடலாம். ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டி ஒரு ஊழியருக்கு மிகவும் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் ஊழியரின் பணிக்காலத்துக்குப் பிறகான பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த உத்தரவு எந்த ஊழியர்களுக்கு பொருந்தும்?

பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் பல்வேறு மாநில அரசுகளும் இதை செயல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அரசு உத்தரவு 

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதி 2021 இன் கீழ் அரசாங்கம் கடந்த காலத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8 அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. அதில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன. மத்திய பணியாளர்கள் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றம் செய்தால் அல்லது அலட்சியம் காட்டினால், பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம்... 5 ஆண்டுகளில் ₹6 லட்சம் வட்டி கிடைக்கும்!

மத்திய அரசு இந்த விதி குறித்து மிகவும் கடினமான போக்கை கையாள்வதாக கூறப்படுகின்றது. மேலும், மாற்றப்பட்ட இந்த விதி குறித்த தகவல்களும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஊழியர் ஏதாவது குற்றம் செய்தால், அந்த குற்றம் இழைத்த ஊழியர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஊழியர்கள் மீது யாரெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும்? 

ஓய்வு பெற்ற பணியாளரின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள பிரெசிடெண்ட்களுக்கு கிராஜுவிட்டி அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க உரிமை உண்டு. ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய செயலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைக்க உரிமை உண்டு. மேலும், ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றம் இழைத்த ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு உரிமை உண்டு.

எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என இதற்கான விதிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் நியமிக்கப்பட்டால், அதே விதிகள் அவருக்கும் பொருந்தும். ஒரு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை எடுத்துக்கொண்ட பிறகு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை திரும்பப் பெறலாம். இது துறைக்கு ஏற்பட்ட இழப்பின் அடிப்படையில் மதிப்பிடப்படும். ஊழியர் பணிபுரிந்த துறை விரும்பினால், பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தலாம்.

இந்த விதி பல ஊழியர்களுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக வந்துள்ளது. இதுவரை எந்த வித குற்றம் மற்றும் அலட்சியத்தில் ஈடுபடாமல் இருந்த நபர்கள் இனி அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். ஏற்கனவே குற்றம் புரிந்தவர்கள் நிச்சயமாக இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்கள். 

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக்.. மார்ச் 31 வரும் சூப்பர் செய்தி, 46% அகவிலைப்படி கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News