இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும்

29 ஆண்டுகளுக்குப் பிறகு மகர சங்கராந்தி அன்று, மகர ராசியில் சூரியனும் சனியும் இணைவது அரிதான தற்செயல் நிகழ்வாக மாறுகிறது. இந்த சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 10:16 AM IST
  • மகர சங்கராந்தி அன்று சூரியன்-சனி சேர்க்கை
  • 29 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அரிய தற்செயல் நிகழ்வு
  • 3 ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்
இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும் title=

புதுடெல்லி: பொங்கல் பண்டிகை இன்னும் 2 நாட்கள் வரபோகிறது. மதத்துடன், ஜோதிடத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான பண்டிகையாகும், ஏனெனில் இந்த நாளில் கிரகங்களின் ராஜாவான சூரியன் தனுசு ராசியை விட்டு வெளியேறி மகர ராசியில் நுழைகிறார். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சூரியனும் சனியும் மகர ராசியில் சந்திக்க உள்ளனர்.

29 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தற்செயல் நிகழ்வு
29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ நிகழ்வு நடக்கள்ளது. இதற்கு முன் 1993ல் சனியும் சூரியனும் மகர ராசியில்  (Zodiac Sign) சந்தித்தனர். சனி மெதுவாக சஞ்சரிப்பதால் இரண்டரை வருடங்களில் ராசியை மாற்றி மீண்டும் அதே ராசியை அடைய 30 வருடங்கள் ஆகும். அதன்படி தற்போது சூரிய - சனி கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி-சூரியன் இணைவதால் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக்க அமையும். இந்த நேரம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த பாராட்டுகளைத் தரும். பதவி உயர்வு-அதிகரிப்பும் கிடைக்கும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

தனுசு: வியாழன் மற்றும் தனுசு ராசியின் அதிபதியான சூரியனுக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாக, இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். பண ஆதாயத்தை அடைய முடியும். வேலை மாற்றம் பெரிய வருமானத்தை தரும். மொத்தத்தில், இந்த நேரம் பொருளாதார நிலைக்கு குறிப்பிடத்தக்க பலத்தை கொடுக்கும். 

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி, பணம் இரண்டையும் பெறுவீர்கள். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்துவதோடு சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். அரசு அல்லது அரசியல் துறையுடன் தொடர்புடையவர்கள், முக்கியமான பதவி அல்லது பொறுப்பைப் பெறலாம். 

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News