எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் - அதிமுக-வில் மீண்டும் உட்கட்சி பூசல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 26, 2022, 10:04 AM IST
  • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்
  • அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
  • நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிகரிக்கும் உட்கட்சி பூசல்
எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் - அதிமுக-வில் மீண்டும் உட்கட்சி பூசல் title=

சென்னையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்ட பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருவதால், தொண்டர்கள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி.. மேலும் ஒரு வழக்கு பதிவு

அதற்கு முக்கிய காரணம் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முன்னிலைப்படுத்துவதாக கட்சியினரிடையே அதிருப்தி குரல்கள் உள்ளன. இதனால், ஒருதரப்பினர் தேர்தலில் அதிமுகவுக்கு வேலை செய்யாததால் எதிர்பார்த்த அளவுக்கான வெற்றியை அதிமுக பெறமுடியவில்லை. தற்போது அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் தலைமைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு விலக வேண்டும் எனக் கூறி சென்னையில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவரது வழிகாட்டுதலின் கீழ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும், அதனால் அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என அந்த போஸ்டரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எடப்பாடி பழனிசாமி சென்றது குறித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News