பதறவைக்கும் CCTV! தங்கச்சியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி

மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை அவரது மனைவி, மகள் கண் முன்பாகவே ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடும் கும்பலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 10, 2023, 01:34 PM IST
  • மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணன்.
  • ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ள சம்பவம்.
  • பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
பதறவைக்கும் CCTV! தங்கச்சியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி title=

மதுரை யாகப்பா நகர் மீனாட்சி தெரு பகுதியை சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி வாசுதேவன். இவர் தனது மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக அவ்வப்போது கேரள மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று அங்கு தங்கி வெலை செய்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 

வாசுதேவனின் சகோதரி பூபதிக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். இவரும் வாசுதேவனின் குடும்பத்தினருடன் கேரளாவில் வேலையை முடித்து மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் படிக்க | மகளிர் தினத்திற்கு அடுத்த நாள்... பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்து... வைரலாகும் சித்ரவதை போட்டோ!

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வாசுதேவனின் சகோதரி பூபதியை அவரது கணவர் மணிகண்டனின் நண்பர் அரவிந்தன் என்பவர் கேலி கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் அரவிந்தனை  அடித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக வாசுதேவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அரவிந்தன் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் வாசுதேவனை  வெட்ட முயன்றபோது குடும்பத்துடன் வீட்டிற்குள் சென்று கதவை சாத்தியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் கதவை உடைத்து வாசுதேவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய வாசுதேவன் உயிரை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடியபோதும் அந்த கும்பல் விடவில்லை. 

இதனையடுத்து அருகில் இருந்த அயர்னிங் கடைக்குள் சென்று சேருக்கு கீழ் பதுங்கிய வாசுதேவனை கண்டுபிடித்த அந்த கும்பல் அங்கயே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது வாசுதேவனின் மனைவி வாசுதேவனை காப்பாற்றுங்கள் என கதறியுள்ளார். ஆனால் யாரும் முன்வராத நிலையில் அந்த கும்பல் வாசுதேவனை வெட்டிவிட்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த வாசுதேவனை அவரது மனைவி அங்கிருந்து பொதுமக்கள் உதவியோடு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த முத்துகுமார், கணேஷ்பாண்டி, இந்துகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும்  வழக்கின் முக்கிய குற்றவாளியான அரவிந்தன் உள்ளிட்ட இருவரை  தேடிவருகின்றனர். 

தனது தங்கச்சியை கேலி செய்த தங்கச்சியின் கணவரின் நண்பரை தட்டிகேட்ட அண்ணனை  ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாசுதேவனை கொலை செய்த கும்பல் கொலை செய்துவிட்டு கையில் ஆயுதங்களுடன் நடந்துசெல்லும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான்... அமைச்சர் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News