நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்படும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்படத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிராக, மேவார் மன்னர் மஹாராணா பிரதாப்பின் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டி, பகவத் இந்தியாவின் வரலாற்றில் நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் 71-வது குடியரசு தினத்தை நாட்டு மக்கள் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பின் நகலை அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்தது.
ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் இதுவரை காணாத ஓர் அடாவடி வழக்கே அயோத்தி பாபர் மசூதி வழக்கு... அதே சமயம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே வழக்கின் தீர்ப்பும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
நீதிபதி N V ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்க உள்ளது.
இந்திய இளைஞர்கள் இனி வெள்ளையான காஷ்மீர் பெண்களை இனி மணப்பதால் பிரச்சனைகள் ஏதும் இல்லை என உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தது சரியா? அல்லது தவறா? என தனது பார்வையை முன் வைக்கிறார் தமிழ்நாடு பசுமைத் தாயகம் அமைப்பை சேர்ந்த இர.அருள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பாராட்டுக்குரியது. இந்திய அரசியலமைப்பின் கீழ் 'தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான்' என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கூறியதாவது, "தனியுரிமைக்கான உரிமைகள் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கூறியதையே உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்றும், மேலும் தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் எனவும் கூறினார்.