‘லங்கேஷ் பத்திரிகே’ ஆசிரியர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலி ஆகி உள்ளார். கன்னட பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான ‘கௌரி லங்கேஷ்’ பெங்களூருவில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.
கேரளாவில் 25 வயதுடைய இந்து மதத்தை சேர்ந்த விபின் தாஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த பிபின் தாஸ் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று பைசல் என்பவரை கொலை செய்தார். இந்த கொலை செய்யப்பட்ட பைசல் என்பவர், முதலில் அவர் அனில் குமார் அலியாஸ் உன்னி என்று இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தார். ஆனால் இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதால், இவர் பைசல் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். பைசல் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருடைய நெருங்கிய உறவினர்களில் சிலரும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்
பீகார் பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் முகம்மது ஷாபுபூதின் மீது சிபிஐ குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சதி மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் ஷாபுபூதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னும் சில குற்றவாளிகளும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
மே 13, 2016 அன்று பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன், சியாணியில் வேலை முடிந்த வீட்டுக்கு திரும்பிவருகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் கோவை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
கொடநாடு காவலாளி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் இன்று கைது செய்யப் பட்டார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
நிர்பயாவிற்கு நடந்ததை போல மீண்டும் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரோக்தாக் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் போலீசார் கூறுகையில், கடந்த 9-ம் வேலைக்கு சென்ற போது 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார் என கூறினர்.
நிர்பயாவிற்கு நடந்ததை போல கொடூரமான செயல் மீண்டும் நடந்துள்ளதால் மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.
மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது.
அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை 2 கார்களில் வந்த முகமூடி கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்து 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தனர். மேலும் 9-வது கேட்டில் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
ஜெ.,வுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டதில் திருட வந்த கும்பல் தான் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக எஸ்.பி., முரளி ரம்பா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவர் நள்ளிரவில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார். இவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த ஹனுமந்தராவ், சசிகலா என்ற தம்பதியர். இவர்களுடைய பூர்வீகம், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஆகும். இந்த தம்பதியருக்கு அனிஷ் சாய் என்று 7 வயதில் ஒரு ஆண் குழந்தை.
ஹனுமந்தராவ், சசிகலா இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். ஹனுமந்தராவ் அலுவலகம் சென்று வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சசிகலாவோ வீட்டில் இருந்தே அலுவலக வேலையை கவனித்து வந்தார்.
இன்று அதிகாலையில் திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தியின் கொலையை பற்றி சிஐஏ 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராஜீவுக்குப் பிறகு இந்தியா என்று தொடங்கும் தலைப்பில் 23 பக்க அறிக்கையை சிஐஏ தயாரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முதல் வரியில்:- பதவிக் காலம் முடிவடைவதற்குள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனினும், அதன் பிறகு இடம்பெற்ற வாசகங்களில், ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(வயது19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த உதயகுமார்(வயது21) சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறித்து விமர்சித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் ராகுல்காந்தி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதாவது மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
ஆணாதிக்க சக்திகளை கொண்ட இந்த சமூகம் மோசமானது என்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்ட பாகிஸ்தானின் பிரபலமான நடிகை குவாண்டீல் பலோச் ‘ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் என்ஜினீயர் பெண் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் படுகொலை செய்தார். படுகொலை செய்யப்பட்ட சுவாதி குடும்பத்தாருக்கு எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.