கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு...

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 24, 2020, 03:07 PM IST
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... title=

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரையில் 26-ஆம் தேதி காலை முதல்  29-ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும், சேலம், திருப்பூரில் 26-ஆம் தேதி காலை முதல் 28-ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்த காலத்தின் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எடுவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் சூழ்நிலையினை கருதி மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் பாதிப்பை பொறுத்தவரையில் வியாழன் அன்று வரை 20 இறப்புகள் உள்பட 1683 வழக்குகள் பதிவாகியுள்ளது. 752 பேர் இதுவரை தொற்றில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். எனினும் தினசரி வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து நேர்கோட்டில் சென்றுகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையினை குறிக்கும் வகையில் மாநில அரசு ஊரடங்கு செயல்முறையினை கடுமையாக்கியுள்ளது.

ஊரடங்கு கடுமையாக்களின் அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ள சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் 400(27 புதிய வழக்குகள் உள்பட) வழக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்து கோவையில் 134 வழக்குகள், திருப்பூரில் 110 வழக்குகள் பதிவாகியுள்ளன. மற்றும் அதிக அளவு தொடர்புகள் மூலம் பதிவான கொரோனா வழக்குகளை பதிவுசெய்த மதுரை (52 வழக்குகள்), சேலம் (29 வழக்குகள்) ஆகிய பகுதிகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. 

இந்த காலக்கட்டத்தின்போது இதுவரை அனுமதிக்கப்பட்ட கடைகள் கூட தடை செய்யப்படும். வாகன இயக்கமும் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் என அரசு தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், மொபைல் வண்டிகளில் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். அனைத்து கடைகளும் திறக்கப்படாமல் இருக்க வேண்டும்,. தொலைபேசிகள் மூலம் செய்யப்பட்ட ஆர்டர்களின் பேரில் ஹோட்டல்களால் பார்சல்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்திய பின்னர் கோயம்பேடு மற்றும் பிற மொத்த சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும். சமூக சமையலறைகள் செயல்படலாம். தேவைப்படுபவர்களின் சேவையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அந்தந்த அதிகாரிகளுடன் அனுமதியுடன் செயல்படலாம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுபவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் இந்த காலகட்டத்தில் வழக்கம் போல் செயல்படும்.

இதேபோல், செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், காவல்துறை, வருவாய் மற்றும் பேரழிவு மேலாண்மை, மின்சாரம், அவின், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரசு துறைகள் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் 33% ஊழியர்களுடன் செயல்படும். அம்மா கேன்டீன்கள் மற்றும் ATM-கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகளில் இன்னும் தெளிவு இல்லை.

ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முழுமையான பூட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு பின்பற்றப்படும் என அறிவித்தது. காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் செயல்பாடு ஏப்ரல் 26 அன்று நாள் முழுவதும் மூடப்படும், இருப்பினும், மாவட்டத்தில் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. மற்றும் அத்தியாவசிய கடைகள் இயங்குவதற்காக காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News