காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்தில் படியில் தொங்கிய வாலிபர்களை நடத்துனர் கண்டித்ததால் பதிலுக்கு வாலிபர்கள் பேருந்து மீது கல் எறிந்ததால் பரபரப்பு.
சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுகட்டாயமாக எழச் செய்தார்.
People Travelled With Umbrella In Pudukkottai Bus : புதுக்கோட்டை அரசுப் பேருந்தின் மேற்கூரைகள் பராமரிப்பில்லாமல் கிடப்பதால் மழைக்காலங்களில் அவதியுறும் பயணிகள்
சீர்காழி அருகே கரைமேடு பகுதியில் அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து. கல்லூரி மாணவர்கள் 7 பேர் உட்பட 18 பேர் காயம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி.
இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. சின்னாளபட்டி அருகில் உள்ள அமலிநகர் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் நின்றிருந்த பஞ்சரான லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அந்த பஸ்சில் சுமார் 5௦ பயணிகள் இருந்ததாக தெரிகிறது.
அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியில் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.