Senthil Balaji arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர், டெல்லி அழைத்து செல்லப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு செல்லும் போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பம்மல் பகுதியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்த டாஸ்மாக் ஊழியர், அமைச்சரையும் தரக்குறைவாக திட்டிய நிலையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.
மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
Senthil Balaji IT Raid: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதையொட்டி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனை 4வது நாளை எட்டியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான எம்சி சங்கர் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வார இறுதியில் சோதனையை தொடங்கினர். அவரது தம்பி அசோக் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை உகந்தது அல்ல என மனுவை திருப்பி அனுப்பியது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சோதனைக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமல் வந்ததால் அவர்கள் அதிகாரிகள்தான் என்பதை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை கேட்கப்பட்டது என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.