தனது தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன்னை படிக்க வைத்ததாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பியதால் அரசுப் பேருந்து நடத்துனரை போலீஸ் அதிகாரி ஒருவர் ரோட்டில் வைத்தே அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகர் உள்பட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்கள் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் அவை ஆளும் கட்சி புள்ளிகளுக்கு சொந்தமானது என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிபோதையில் விழுந்துகிடந்த முதியவரையும் அவரது ரூ. 22,000 பணத்தையும் காவல் துறையில் ஒப்படைத்த சிறுவர்களை அண்ணா நகர் துணை ஆணையர் சிவ பிரசாத் பாராட்டினார்.
சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் பேசு பொருளாக ஆகியுள்ள நிலையில், லாக் அப் மரணங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கூறுவதைக் கேட்கலாம்.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொலை செய்துவிட்டு ரவுடி மதன் இறந்தவரின் சடலத்துடன் செல்பி எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்த கொடூரம் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.