Chandrababu Naidu: ஆந்திராவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது நூலிழையில் ரயிலில் இருந்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் பெய்த கனமழையால், கேஷமுத்ரம் என்ற பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டதால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது. இதனையடுத்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தெலங்கானாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது நிகழ்ந்த சோகம். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரால் குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி வளாகம்; சேரும் சகதியுமாக பள்ளி வளாகம் இருப்பதால் மாணவர்கள் அவதி.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்காலிக மண் பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் இரு கிராமங்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தின் குன்னூர் பகுதியை சேர்ந்த கணவர் - மனைவி - குழந்தை பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
Delhi IAS Aspirants Died: டெல்லியில் கோச்சிங் சென்டரில் புகுந்த வெள்ளத்தால் அங்கு பயின்று வந்த மூன்று மாணவர்கள், பரிதாபகமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அவசரமாக வெளியேற்றிய வனத்துறையினர் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.