புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கோவை உயர்மட்டப் பாலம் கொண்டுவரப்பட்டது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்குப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.