கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் டாஸ்மாக் மூடப்படுகிறதா..!!!

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2021, 07:04 AM IST
கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் டாஸ்மாக் மூடப்படுகிறதா..!!! title=

தமிழ்நாட்டில் (Tamil Nadu) கடந்த 24 மணி நேரத்தில், 1,985 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று, ஈரோட்டில் 178 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா (Corona Virus) மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய இடங்களில் உள்ள, அதிகம் அளவு மக்கள் வருகை தரும் 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் (TASMAC) மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி கோயம்புத்தூரில் நகர பகுதியில் உள்ள 100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, கிராஸ் கட் சாலை, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் இருக்கும் 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்திரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோயம்புத்தூரில் 239 பேரும், அடுத்ததாக சென்னையில் 189 பேரும், ஈரோட்டில், 178 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 122 பேரும், திருவள்ளூர் மாவட்டங்களில் 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளன. 

ALSO READ | தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. ரயில் மூலம் தமிழகத்திற்குள் வருபவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றை காண்பித்து தமிழகத்திற்குள் வருகின்றனர்.

Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 6 தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News