நவம்பர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமா? பள்ளிக்கல்வித்துறை கூறியது என்ன?

வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2021, 05:28 PM IST
நவம்பர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமா? பள்ளிக்கல்வித்துறை கூறியது என்ன?  title=

கொரோனா தொற்றுநோய் உலக மக்களை பாடாய் படுத்தி இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. மக்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. 

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொண்டனர். அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளில் கல்வித்துறையும் ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லாமலேயே, வகுப்பறைகளில் அமராமலேயே மாணவர்கள் கல்வி ஆண்டுகளை நிறைவு செய்தனர்.

தற்போது, கொரோனா (Corona) நோய்த்தொற்றின் தீவிரம் மெல்ல குறைந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும், ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  

ALSO READ: TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது

பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:   

- காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 

- அதாவது, திங்களன்று ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால், செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்களுக்கு பாடம் நடக்கும். 

- ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க வேண்டும்.

- பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும்.

- ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம்.

- மாணவர்கள் பள்ளிக்கு (TN Schools) வர வேண்டியது கட்டாயமில்லை. பெற்றோர்கள் விருப்பதுடன், அவர்களது ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.

ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நவம்பர் 1 முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கவுள்ளன. இதற்கிடையில், மழலையர், நர்சரி பள்ளி மாணவர்களுக்கான பள்ளி துவக்கம் பற்றி சிறிய குழப்பம் இருந்த நிலையில், இப்போதைக்கு அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியது. இது குறித்த தகவல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ: பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News